
சென்னை: அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25% ஏழை, எளிய மக்கள் கல்வி பெறும் முறை பயன்பாட்டில் உள்ளதா, இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது? என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்பு தமிழக அரசு ஏழை எளிய மக்களும் நல்ல கல்வி முறையை பயில வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் அரசு நிதி உதவியுடன் தனியார் பள்ளிகளில் 25% வரை கல்வி பயின்று பயன் பெறலாம் என்று உத்தரவிட்டிருந்தனர்.