
நேற்று சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நடந்துகொண்டு இருந்திருக்கிறது.
அப்போது அங்கு தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைத்துள்ள தரவுகளின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்துள்ளனர். 52 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தற்கொலைப் படை தாக்குதல் குறித்து சிரியா அரசு கூறுவதாவது, “இந்தத் தற்கொலைப் படை தாக்குதலை சிரியாவை சேர்ந்த ஐ.எஸ் என்னும் இஸ்லாம் தீவிரவாத அமைப்பு தான் நடத்தியுள்ளது. இந்த அமைப்பை சேர்ந்த ஒருவர், துவேலாவில் உள்ள செயிண்ட் எலியாஸ் தேவாலயத்திற்குள் நுழைந்து தான் கட்டி வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருக்கிறார்” என்று குற்றம் சாட்டுகிறது.
இந்த சம்பவத்தில் குழந்தைகளும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் கண்டவர், “தற்கொலை படையை சேர்ந்தவர் எலியாஸ் தேவாலயத்திற்குள் வந்து வெடிகுண்டு போன்ற ஒரு கருவியை வெடிக்க செய்தார்” என்று கூறியிருக்கிறார்.
சிரியா அந்த நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரிடம் கொஞ்சம் கொஞ்சமாக இணக்கமாக செயல்பட சிரியா நாட்டு அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில், இந்த சம்பவம் மீண்டும் அதிருப்தியைக் கிளப்பி உள்ளது.