
சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா நடிப்பில் கடந்த ஜூன் 20 ஆம் தேதி ‘குபேரா’ திரைப்படம் வெளியானது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வெற்றி விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய தனுஷ், “ இந்தப் படம் வெற்றி அடைந்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். மேலும் இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி.
மனித உணர்வுகளை விட பெரியது வேறு எதுவும் இல்லை!
தற்போதெல்லாம் திரைப்படங்கள் தியேட்டரில் ஓடுவதே கேள்வி குறியாகி இருக்கிறது. ரத்தம், கத்தி, ஹெலிகாப்டர்கள் இடம்பெறும் ஆக்ஷன் படங்கள் மட்டுமே மக்களை தியேட்டர்களுக்கு அழைத்து வரும் என்ற மாயை நிலவுகிறது.
ஆனால் மனித உணர்வுகளும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வரும் என்ற நம்பிக்கையை ‘குபேரா’ படத்தின் மூலம் இயக்குநர் விதைத்திருக்கிறார். மனித உணர்வுகளை விட பெரியது வேறு எதுவும் இல்லை.
‘டூரிஸ்ட் ஃபேமிலி’
எதிர்கால இயக்குநர்களுக்கும் இதுபோன்ற படங்கள் நம்பிக்கையை விதைக்க வேண்டும்.பெரிய பட்ஜெட், கிராபிக்ஸ், சூப்பர் ஹீரோ படங்கள்தான் இனி கைகொடுக்கும் என்ற எண்ணம் அடுத்த தலைமுறை இயக்குநர்களுக்கு வரக் கூடாது.
சமீபத்தில் தமிழில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்றது. சாதாரண மனிதர்களை பற்றி பேசிய அந்தப் படமும் மக்களை திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது.

வெற்றி கிடைக்கும்போது குறைவாக பேசவேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார். எனவே நான் இனி அதிகம் பேசப் போவதில்லை. குறைவாகத்தான் பேசப் போகிறேன். நமது ஆசிர்வாதங்களை கணக்கில் கொள்வதும் மிக முக்கியம் என்று என் அப்பா சொல்வார்.
தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை காண்பதும் மிக முக்கியம் என்று சொல்வார். என் தயாரிப்பாளரின் முகத்தில் சிரிப்பை பார்ப்பதில் மகிழ்ச்சி” என்று வெற்றி விழாவில் தனுஷ் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…