
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கோர்ஸில் 23,600 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நீர்நிலைகளை உருவாக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது.
சென்னையில் 2015-ம் ஆண்டு பெரு வெள்ளம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிக மழை கிடைக்கும் காலங்களிலும், பெரு வெள்ளத்தின்போதும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பதற்காக, சென்னை மாநகரம் முழுவதும் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார திட்டமிட்டது.