
காதல் தோல்வி காரணமாகப் போதைக்கு அடிமையாகி இருக்கிறார், ஆனந்த் (அதர்வா). சிறிய மனநோய் பிரச்சினையில் இருக்கும் நாயகி திவ்யாவுக்கு (நிமிஷா சஜயன்) திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவர்களைக் குடும்பங்கள் புறக்கணித்த நிலையில், இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.
அவர்களுக்குப் குழந்தைப் பிறக்கிறது. அந்தக் குழந்தையைக் கையில் வாங்கும் திவ்யா, அதை தனது குழந்தை இல்லை என்கிறார். அந்த குழந்தைக்கு என்ன ஆனது, திவ்யாவிடம் இருக்கும் குழந்தை யாருடையது என்பதை சொல்கிறது இந்த ‘டிஎன்ஏ’.