
சென்னை: அந்நிய முதலீட்டில் தமிழகம் ஆமை வேகத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் 2024-25 நிதியாண்டு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் 51 சதவீத அந்நிய முதலீடுகளை மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் இணைந்து கைப்பற்றியுள்ளன. தமிழகம் வெறும் 3.68 பில்லியன் டாலருடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.