• June 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஈ​ரானிலிருந்து 1,428 இந்​தி​யர்​கள் தாயகம் திரும்​பினர். மேலும் 800 பேர் நாடு திரும்ப விருப்​பம் தெரி​வித்​துள்​ளனர். இஸ்​ரேல், ஈரான் இடையே கடந்த ஒரு வாரத்​துக்​கும் மேலாக போர் நடை​பெற்று வரு​கிறது. இதையடுத்​து, ஆபரேஷன் சிந்து திட்​டத்​தின் மூலம் ஈரானில் உள்ள இந்​தி​யர்​கள் அழைத்து வரப்​படு​கின்​றனர்.

இதற்​கான ஏற்​பாடு​களை ஈரானில் உள்ள இந்​திய தூதரக​மும் மத்​திய வெளி​யுறவு அமைச்​சக​மும் செய்து வரு​கிறது. இது​வரை 4 தனி விமானங்​களில் மாணவர்​கள் உட்பட 1,100 பேர் தாயகம் திரும்பி உள்​ளனர். இந்​நிலை​யில், 300-க்​கும் மேற்​பட்​ட​வர்​களு​டன் 5-வது விமானம் நேற்று மாலை டெல்லி இந்​திரா காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தடைந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *