• June 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: கலாச்சாரத்தைப் பாதுகாக்கவே முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: குன்று இருக்கும் இடத்தில் எல்லாம் குமரன் இருப்பார். ‘முருகா முருகா’ என்று சொன்னால் உருகாதார் யாரும் கிடையாது. தமிழ்க் கடவுள் முருகன் என்று ஏன் சொல்கிறோம். முருகா என்பதில் வல்லினம், மெல்லினம், இடையினம் இருக்கிறது. சொக்கநாதர் பூமியான மதுரையில் கூடியிருக்கிறோம். தூங்கா நகரமான மதுரையில் நீதி கிடைத்திருக்கிறது. தமிழக அரசிடமிருந்து நீதி கிடைத்ததோ இல்லையோ நீதிமன்றம் மூலம் நமக்கு நீதி கிடைத்துள்ளது. இந்த மாநாட்டைப் பார்த்து பலர் மலைத்துப் போயிருக்கின்றனர். பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர். அந்த தடைகளை கடந்து மாநாடு நடந்து கொண்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *