• June 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: நீதியை தட்டிக் கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று மதுரையில் நடந்த முருகபக்தர்கள் மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் வேண்டுகோள் விடுத்தார்.

மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நேற்று காலை முதலே வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வரத் தொடங்கினர். வாகனங்களுக்கு பாஸ் தேவை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஏராளமான வாகனங்கள் மாநாட்டுக்கு வந்தன. பல லட்சம் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். டையின் நடுவே முருகன் வேலுடன் நிற்பது போன்ற முழு உருவ கட்அவுட், அதன் பின்னணியில் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரம், மலை இருப்பதுபோன்று வடிவமைக்கப்
பட்டிருந்தது. சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியாக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *