
புதுடெல்லி: யமுனை நதி தூய்மைப்படுத்தும் திட்டம் குறித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: யமுனை நதி நமது நம்பிக்கையின் சின்னம். ஆனால், டெல்லியை ஆண்ட முந்தைய அரசுகள் யமுனையை புறக்கணித்து விட்டன. யமுனையை சுத்தம் செய்ய அக்கறை காட்டவில்லை. ஆனால் முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் யமுனை நதி நீரை குடிப்பேன் என்று பேசினார். அதை அவர் நிறைவேற்றவில்லை. பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் யமுனையை சுத்தம் செய்ய கடுமையாக உழைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.