
கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அரசுக்கு எதிராக மாறி வாக்களிக்க தயங்க மாட்டோம் என, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் அ.மாயவன் தெரிவித்தார்.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் முப்பெரும் விழா நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனத் தலைவர் மாயவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாங்கள் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும் போது திமுக கொடுத்த வாக்குறுதியில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய வேண்டும் என்று எந்த சங்கமும் முன்னெடுக்காத ஒரு பணியை நாங்கள் செய்தோம்.