
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் சிறையில் தள்ளுவோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்குப் பதிலாக தமிழக பாடத்திட்டத்தையே புதுச்சேரியில் அமல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ''ஆங்கிலத்துக்கு எதிரான மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்து இந்திய மக்கள் முன்னேற்றக்கூடாது என்பதற்கானது. அமித் ஷா வேண்டுமென்றே மொழியின் பெயரால் கருத்து வேறுபாடுகளை மாநிலங்களில் உருவாக்கும் வகையில் தேவையில்லாமல் பேசியுள்ளார். புதுச்சேரியில் வரும் 2026ல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைத்தால் ஹிந்தி மொழி கட்டாயம் என்பதை நீக்குவோம்.