• June 22, 2025
  • NewsEditor
  • 0

தனுஷ் நடிப்பில் வெளியாகிய ‘குபேரா’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. நாகர்ஜூனா, ராஷ்மிகா உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

தனுஷுக்கு எவர்கிரீன் ஹிட் பாடல்களை இசையமைத்த தேவி ஶ்ரீ பிரசாத்தே, இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத்

டோலிவுட்டில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் அவரை ‘குபேரா’ படத்திற்காக சந்தித்துப் பேசினோம்.

சேகர் கம்முலாவுடன் முதல் முறையாக இணைந்திருக்கிறீர்கள். இந்தக் கூட்டணி அமைந்தது எப்படி?

இதற்கு முன்னாடியே நாங்கள் இருவரும் இணைந்து வேலை பார்க்க வேண்டியிருந்தது. ஆனால், அப்போது அது அமையவில்லை. இப்போதுதான் அமைந்திருக்கிறது.

என்னுடைய பாடல்கள் அவருக்குப் பிடிக்கும். அதுபோல, அவருடைய திரைப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். சேகர் கம்முலா சார் அதிகமாக லவ் ஸ்டோரிஸ்தான் பண்ணுவார்.

இந்த முறை புதிய ஜானரைத் தொட்டிருக்கிறார். அந்தப் படத்துக்கு நான் இசையமைத்ததில் மகிழ்ச்சி. சொல்லப்போனால், அவர் இந்தப் படத்தின் கதையைச் சொன்னதுமே அவருக்குக் கைக்கொடுத்து பாராட்டினேன்.

கதையை அவர் சொன்னது போலவே படத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக எடுத்திருக்கிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத்
தேவி ஶ்ரீ பிரசாத்

இந்தப் படத்துக்கு எப்படியான மியூசிக்கல் டிரீட்மென்ட் கொடுக்கலாம்னு திட்டமிட்டீர்கள்?

சேகர் சார் இந்தக் கதையைச் சொல்லும்போது இந்தந்த இடங்களில் இப்படியான டிரீட்மென்ட் கொடுக்கலாம்னு பிளான் பண்ணிட்டேன். சேகர் சார் படங்களில் இசைக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும்.

படத்தில் வரும் யாசகர், திருப்பதியிலிருந்து வருபவர். அதனால் அங்கு ஒரு தெய்வீக டச் வைக்கலாம்னு திட்டமிட்டேன். அப்படி உருவானதுதான் ‘தீம் ஆஃப் குபேரா’.

இந்த தீமை நான் படத்தில் பல வகைகளில் பயன்படுத்தியிருப்பேன். ப்ரீ-ரிலீஸ் ஈவென்ட்டில் ராஜமெளலி சார்கூட அந்த தீம் பாடலைப் பாடி பாராட்டினார். அதுபோல, நாகர்ஜூனா சாருக்கு ஸ்டைலிஷான இசை கொடுக்கணும்னு பிளான் பண்ணி பண்ணினோம்.

இப்போ நிறைய சுயாதீன இசைக்கலைஞர்கள் வந்துட்டாங்க. அதன் மூலமாக சினிமாவுக்குப் புது வரவுகளும் கிடைக்குது. இந்த விஷயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த விஷயத்தை ரொம்பவே சிறப்பானதாகப் பார்க்கிறேன். சுயாதீன இசைக்கலைஞராக வந்து ஹிட் கொடுப்பது ரொம்ப அழகான விஷயமும்கூட. ஆனால் ஒரு விஷயம், ஒரு பாடல் ஹிட் ஆகுற வரைக்கும் எவ்வளவு போராட வேண்டியிருக்குமோ, அதேபோல ஒரு பாடல் பெரிய ஹிட் அடிச்ச பிறகும் பெரிய போராட்டம் இங்கு இருக்கும்.

ஒரு வகையான பாடல்கள் மூலமாக ஹிட் கொடுத்தீர்கள் என்றால், அது மாதிரியே தொடர்ந்து பாடல்கள் பண்ணச் சொல்வார்கள். அது உங்களுக்குச் சவாலாகவும் வரலாம். நான் 16 வயசில் இசையமைப்பாளராக ஆனேன். இளம் வயதில் இசையமைப்பாளராக ஆனது நான்தான்னு நினைக்கிறேன்.

வேறு யாரும் அந்தப் பட்டியலில் இருக்கிறார்களானு தெரியலை. நான் ‘தேவி’ படத்தின் மூலமாகத்தான் சினிமாவில் அறிமுகமானேன். அந்தப் படம் பாதி பாண்டஸி படமாக இருந்தது.

அந்தப் படத்தில் வழக்கமான பாண்டஸி இசையை அமைக்காமல் வேறு மாதிரி இசையமைத்தேன். அந்த இளம் வயதில் அப்படியான இசையமைத்ததற்குப் பாராட்டினார்கள். அந்தப் படமும் பெரிய அளவில் ஹிட்டடித்தது.

இப்போ பல இசையமைப்பாளர்களும் அவங்க மியூசிக் போடுற படத்தில் சின்னச் சின்ன கேமியோக்கள் பண்ணுறாங்க. நீங்க முன்னாடியே அப்படியான விஷயங்கள் பண்ணிட்டீர்கள். அப்படித் தொடர்ந்து பண்ணுறதுக்கான காரணம்?

நமக்கு க்ளோஸான ஆக்டர்ஸ் மற்றும் டைரக்டர்ஸ் பண்ணுற விஷயம்தான். சிரஞ்சீவி சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த படத்துக்கு நான் இசையமைக்கும்போது ஒரு முறை என்னோட பாட்டுக்கு அவர் நடனமாடுறதைப் பார்க்கப் போனேன்.

அவர் எப்போதுமே என்னை ‘மை பாய்’னுதான் கூப்பிடுவார். அப்படி அவர் நடனமாடுறதை நேரில் பார்த்துட்டு கிளம்பும்போது, அவர் என்னைக் கூப்பிட்டு ஒரு பாடலில் கையில் கட்டுப் போட்டு நடிக்க வைத்தார்.

அதே மாதிரி, பிரபு தேவா இயக்குநராக அறிமுகமான முதல் படத்துக்கு நான் மியூசிக் போட்டேன். அவர் என்னையும் சிரஞ்சீவி சாரையும் ஒரு கோரியோ பண்ண வைத்த தருணமும் ஒண்ணு இருக்கு.

அதைப் பற்றி அவர், ‘எவ்வளவு நாட்களுக்குப் பிறகு அதை நீ பார்த்தாலும், அது உனக்கு மெமோரியாக இருக்கும்’னு சொன்னார். எங்களை ஒரு பாடலுக்கு நிக்க வைத்துட்டு அவர் ‘ரெடியா’னு கேட்டார்.

எனக்கு அந்தப் பாடலில் சுத்தமாக நடனமாடவே வரலை. மகிழ்ச்சியின் உச்சத்துக்கே நான் போயிட்டேன். அதனாலதான் அப்போ நடனமாட வரலை. பிறகு அந்த சாங் ஷூட் பண்ணி முடிச்சிட்டு, சிரஞ்சீவி சார் அவருடைய கையால் என் நெற்றியில் வைத்து சல்யூட் பண்ணி ஒரு போட்டோ எடுத்தார்.

அதே மாதிரிதான் கமல் சாரும். அவர் என்னை ‘He is my Boy’னு கூப்பிடுவார். ‘நீல வானம்’ பாடலுக்குத் திடீர்னு கிட்டார் எடுத்துட்டு வரச் சொன்னார். அந்தப் பாடலும் ரிவர்ஸில் இருக்கும். அந்தப் பாடலில் என்னை நடிக்க வைத்தார்.

இதெல்லாம் ஒரு அழகான விஷயம். ரொம்ப நாள் கழிச்சு பார்க்கும்போது நினைவுகளாக இருக்கும். சிரஞ்சீவி சார், கமல் சார் அவங்களுக்கு இருக்கிற பிஸியான வேலையில் இதெல்லாம் பண்ணனும்னு அவசியம் இல்லை. ஆனால், எனக்காக பண்ணினாங்க.

முழுப் பேட்டியைக் காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *