• June 22, 2025
  • NewsEditor
  • 0

முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டு முன்னேற்பாடுகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மாநாட்டிற்கு நாளை 10 லட்சம் முருக பக்தர்கள் வருகை தர உள்ளனர். மாலை 6 மணிக்கு இங்குள்ள அத்தனைப் பேரும் ஒன்றாக இணைந்து கந்த சஷ்டி கவசம் பாடவிருக்கிறோம்.

முருக பக்தர் மாநாடு-மதுரை

அதேபோன்று உலகம் முழுவதும் இருக்கிற முருக பக்தர்களும் வர முடியாவிட்டால் வீடுகளில் கந்த சஷ்டி கவசத்தைப் பாட வேண்டுமென மாநாட்டுக் குழுவின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

கந்த சஷ்டி கவசத்திற்கு அப்படி ஒரு பவர் உள்ளது. கறுப்பர் கூட்டத்திற்கு வெற்றி வேல் யாத்திரை மூலம் சரியான தண்டனை பெற்றுக் கொடுத்தோம், அதேபோல் முருக பக்தர்கள் மாநாடு தமிழக அரசியலிலும் சரி, ஆன்மீகத்திலும் சரி மிகப்பெரிய தாக்கத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தும்.

தமிழகம் ஆன்மீக பூமி என்பதை இந்த மாநாடு நிரூபிக்க இருக்கிறது, நாயன்மார்களும், ஆழ்வார்களும், சித்தர்களும் வாழ்ந்த இந்த பூமியில் பல லட்சம் முருக பக்தர்கள் ஒருங்கிணைகிறார்கள்” என்றவரிடம்,

“தமிழக மக்களிடம் மாநாடு மாற்றத்தை உண்டாக்குமா” என்ற கேள்விக்கு

“இந்த மாநாடு முடிந்த பின்னர் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி, மாலை நடைபெறக்கூடிய மாநாட்டிற்கு வாகனங்கள் சாரை சாரையாக வந்து கொண்டிருக்கின்றன. இது ஒரு மக்கள் சுனாமி என்று சொல்லும் அளவிற்கு இந்த மாநாடு இருக்கும்.

முருக பக்தர் மாநாடு-மதுரை
முருக பக்தர் மாநாடு-மதுரை

இந்த மாநாட்டைத் தடை செய்ய திமுகவினுடைய காவல்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்தார்கள், ஒவ்வொரு ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சட்டத்தின் மூலமாக அவர்களிடமிருந்து நிவாரணம் பெற்றுள்ளோம்.

குறிப்பாக இ-பாஸ் வாங்க வேண்டும் என்பது, எந்த மாநாட்டிற்கும் இப்படி நடைமுறை இல்லை, ஜனநாயக நாட்டில் மக்கள் கூடுகின்ற உரிமையை நசுக்கும் பல்வேறு இடைஞ்சல்களை திமுக அரசு கொடுத்தது.

நான் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல தடை விதித்து பல்வேறு இடைஞ்சல்களைச் செய்து வருகிறார்கள்

நாங்கள் நடத்தும் மாநாட்டைப் பற்றி அமீர் போன்றோர் கருத்துச் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாநாட்டுக்குச் சம்பந்தம் இல்லாத நபர். முருக பக்தர்கள் மாநாடு பற்றிப் பேசக்கூடாது. தங்களை இழிவு செய்வதை முருக பக்தர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *