
ஹரியானாவில் 2 மாதங்களாக தேடப்பட்டு வந்த இளம் பெண்ணை, கணவர் குடும்பத்தினர் கொலை செய்து வீட்டு முன் புதைத்தை போலீஸ் விசாரணையில் மாமனார் ஒப்புக் கொண்டார். இதையடுத்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம் ஃபிரோசாபாத் மாவட்டம் கேரா கிராமத்தை சேர்ந்த இளம் பெண் டானு ராஜ்புத்(25). இவருக்கும் ஹரியானா ஃபரிதாபாத்தைச் சேர்ந்த அருண் சிங் (28) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் டானு ராஜ்புத்தை காணவில்லை என போலீஸில் அவரது கணவர் அருண் சிங் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி புகார் அளித்தார். மனநிலை பாதிப்பில் இருந்த அவரை திடீரென காணவில்லை எனவும், அவர் காதலுடன் ஓடிப்போயிருக்கலாம் எனவும் போலீஸில் கணவர் கூறினார்.