
வாக்குப்பதிவு தொடர்பான சிசிடிவி காட்சிகளை வெளியிடுவது வாக்காளர்களின் அந்தரங்க உரிமைக்கு முரணானது என ராகுல் காந்தி கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் உட்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. இதுபோல வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் உத்தரவிட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் செயல். இதன்மூலம் வெற்றியை முன்கூட்டியே தீர்மாணித்திருப்பது தெளிவாகிறது. இது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது" என கூறப்பட்டுள்ளது.