
‘ரெட்ரோ’ படம் வெளியாகி 50 நாட்கள் கடந்ததை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. மே 1-ம் தேதி வெளியான இப்படம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. தற்போது இப்படம் வெளியாகி 50 நாட்கள் ஆனதை முன்னிட்டு கார்த்திக் சுப்பராஜ் பகிர்ந்த பதிவில், “‘ரெட்ரோ’ வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்டது. எனக்கு தனிப்பட்ட முறையில் ஒரு சிறப்பான பயணமாகவும், படமாகவும் இருந்தது.