• June 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: “வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது உள்ளிட்ட செயல்பாடுகள் ‘ஜனநாயகத்துக்கு விஷம்’ போன்றது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை டிஜிட்டல் வடிவில் வெளியிட தேர்தல் ஆணையம் மறுக்கிறது. மேலும், வாக்குப் பதிவு மையங்களில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை 45 நாட்களுக்கு பிறகு அழித்து விடுமாறும் உத்தரவிட்டுள்ளது. இது ஆதாரங்களை அழிக்கும் செயல். இதன்மூலம் வெற்றியை முன்கூட்டியே தீர்மானித்திருப்பது தெளிவாகிறது. இது ஜனநாயகத்துக்கு விஷம் போன்றது” என கூறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *