• June 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: “பாஜக எத்தனை முருக பக்தர்கள் மாநாடு நடத்தினாலும் அதனுடைய சுயரூபத்தை தமிழ் மக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள், நிச்சயம் ஏமாற மாட்டார்கள்” என என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டின் நிதியுதவியும், கார்ப்பரேட்டுகளின் நன்கொடையும் அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது பாஜக ஆட்சியில் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக பொருளாதார கொள்கைகளை வடிவமைத்து அதன்மூலம் பல்வேறு சலுகைகளை அளித்து அவர்கள் பெரும் லாபம் ஈட்டுகிற நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பாஜக செயல்பட்டு வருகிறது. அதன் காரணமாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மோடியின் மிக நெருங்கிய நண்பர்களான அதானி, அம்பானி ஆகியோர் குவித்த சொத்துக்கள் பலமடங்கு பெருகியதை சர்வதேச புகழ் பெற்ற ‘எக்னாமிஸ்ட்” இதழ் மற்றும் ‘ஆக்ஸ்பார்ம்” பலமுறை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *