
கோவை: கேலிச்சித்திரம் மூலம் அவதூறுகளை பரப்பும் திமுகவுக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கீழடி குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவான பதிலை கொடுத்து இருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கின்ற பொழுது, என்னென்ன நடவடிக்கை எடுத்தார்கள், அதன் பிறகு அதிமுக அரசு, கீழடி அகழாய்வில் எப்படி எல்லாம் ஈடுபட்டிருக்கிறது என்ற விளக்கத்தை முழுமையாக தெரிவித்து விட்டோம்.