
ஜூன் 1-ம் தேதி மதுரையில் திமுக பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டத்தை கூட்டி முடித்த அடி மறைவதற்குள் பாஜக மையக் குழு நிர்வாகிகள் கூட்டத்தை அதே மதுரையில் கூட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “50 தொகுதிகளில் போட்டியிடுவதற்கான பாஜக வேட்பாளர்களை தயார் செய்யுங்கள்” எனச் சொல்லிச் சென்றிருக்கிறார். இதை மதுரையில் வைத்து சொல்லி இருப்பது தான் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.
அதிமுக – பாஜக கூட்டணி இருப்பதால் கொங்கு மண்டலத்தில் பாஜக-வுக்கு இயல்பாகவே செல்வாக்கு கூடி இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக தென் மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக, அதற்காகவே தினகரனையும், ஓபிஎஸ்ஸையும் முக்குலத்தோர் சமூகத்தின் முகங்களாக தங்களது கூட்டணிக்குள் இழுத்துப் போட்டு வருகிறது.