
சென்னை: சென்னையில் ரூ.80 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். அங்கு முதல் நிகழ்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்துக்கு வந்தார். வளாகத்தின் முன்பு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர், உள்ளே சென்று பார்வையிட்டார். முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் பராமரிக்கப்படாமல் இருந்த வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடியில் சீரமைக்கப்படும் என்று அறிவித்து, நிதி ஒதுக்கினார்.