
சென்னை: மூத்த குடிமக்களுக்கு 6 மாதங்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிகளுக்கு வழங்குதல் ஆகிய பணிகள் இன்று (ஜூன் 21) முதல் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெறுகிறது.
அடையாறு, வியாசர்பாடி, ஆலந்தூர், அயனாவரம் உள்ளிட்ட 40 பணிமனை பேருந்து நிலையங்களில் காலை 8 முதல் இரவு 7.30 மணி வரை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர், வழக்கம்போல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில் வழங்கப்படும்.