
சென்னை: சன் டிவியின் 12 லட்சம் பங்குகளை ஒரேநாள் இரவில் முறைகேடாக தனது பெயருக்கு மாற்றி கருணாநிதி மற்றும் மாறன் குடும்பத்தாருக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கு எதிராக அவரது தம்பியும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் இரண்டாவது முறையாக வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக தயாநிதி மாறன் சார்பில் வழக்கறிஞர் கே.சுரேஷ் கடந்த ஜூன் 10 அன்று சன் நெட்வொர்க் தலைவரான கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, சன் நெட்வொர்க் கம்பெனி செயலாளர் ரவி ராமமூர்த்தி, சன் நெட்வொர்க் தலைமை நிதி அதிகாரி மயிலாப்பூர் நடராஜன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியன், நிதி ஆலோசகர்கள் அண்ணாநகர் ஸ்ரீதர் சுவாமிநாதன், மந்தைவெளி சுவாமிநாதன் மற்றும் உதயா டிவி, ஜெமினி டிவி பங்குதாரர் ஷரத்குமார் ஆகிய 8 பேருக்கு எதிராக அனுப்பியுள்ள வழக்கறிஞர் நோட்டீஸில் கூறியிருப்பதாவது: