• June 20, 2025
  • NewsEditor
  • 0

டயப்பரை அழுக்காக்கியதால் கொதிக்கும் நீரில் குழந்தையைப் போட்டு கொன்ற பெண்ணை காவல்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்தவர் ஜடோரியா ரெனே கிளீமன்ஸ் (21). இவருக்கு 8 மாத ஆண் குழந்தை இருந்தது. அந்தக் குழந்தை டயப்பரில் மலம் கழித்ததால் ஆத்திரமடைந்த ஜடோரியா ரெனே கிளீமன்ஸ், குழந்தையை கொதிக்கும் நீரில் போட்டிருக்கிறார்.

இதனால் குழந்தை கதறி துடித்திருக்கிறது. அருகில் வசிப்பவர்கள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர்.

கொல்லப்பட்ட குழந்தை

கடுமையான காயங்களால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியவில்லை. இதற்கிடையில் குழந்தை எப்படி கொதிக்கும் நீருக்குள் விழுந்தது என்பது தொடர்பாக காவல்துறை விசாரணையை தொடங்கியது. இந்த நிலையில்தான் குழந்தையின் தாய், குழந்தை இறந்த அன்று என்ன நடந்தது என்பது குறித்து அவரின் தோழியிடம் தெரிவித்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் காவல்துறை குழந்தையின் தாயை கைது செய்ய கைது வாரண்ட் பிறப்பித்திருக்கிறது. இந்த கொடூரமான சம்பவம் பிப்ரவரி 4, 2025 அன்று நடந்தது என்றாலும் ஜூன் 13 வரை கைது வாரண்ட் பிறப்பிக்கப்படவில்லை. எனவே தற்போது தலைமறைவாக இருக்கும் ஜடோரியா ரெனே கிளீமன்ஸை தேடி வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *