
சென்னை: ராகுல்காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மும்மத பிரார்த்தனை செய்தும் நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒருபகுதியாக மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவ.ராஜசேகரன் ஏற்பாட்டில், மண்ணடி காளிகாம்பாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில், கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு ராகுல்காந்தி நலமுடன் வாழ பிரார்த்தனை செய்தார்.