• June 20, 2025
  • NewsEditor
  • 0

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள ஆதார் மையத்தில் ஆதார் அட்டையில் திருத்தம், கை ரேகை அப்டேட் செய்வது, புதிய ஆதார் அட்டை எடுப்பது என பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களில் 40 பேருக்கு மட்டும் டோக்கன் விநியோகித்துவிட்டு மற்றவர்களை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பொதுமக்கள், சிறுவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள இ-சேவை மையத்துக்குள்ளேயே ஆதார் மையம் இயங்கி வருகிறது. இந்த ஆதார் மையத்துக்கு காலை 9 மணிக்கே பொதுமக்கள் வந்துவிடுகின்றனர். கைக் குழந்தைகளுடன் வருவோர், முதியோர், கர்ப்பிணிகள் என பலர் சுமார் ஒரு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *