
கிருஷ்ணகிரி: ‘மா’ விவசாயிகளை கண்டுக்கொள்ளாத திமுக அரசை கண்டிப்பதாக, கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை எதிரே ‘மா விவசாயிகளை கண்டுகொள்ளாத திமுக அரசை கண்டித்து’ அதிமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இன்று ( ஜூன் 20) காலை 9 மணிக்கு தொடங்கிய உண்ணாவிரத போராட்டம், மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. தொடர்ந்து அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட 668 ‘மா’விவசாயிகளுக்கு இழப்பீடாக ரூ.2.75 கோடி வழங்க, அரசுக்கு அப்போதைய ஆட்சியர் கோப்புகளை தயார் செய்து அனுப்பி வைத்தார். தற்போது வரை இழப்பீடு வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.