• June 20, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர்: ‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குறித்து அவதூறு பரப்பிய தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரி விருதுநகர் எஸ்.பி.யிடம் அதிமுகவினர் இன்று புகார் அளித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கார்ட்டூன் உருவத்தைக் கேலி செய்யும் வகையில் சித்தரித்து திமுக எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக, விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட கழக தலைவர் விஜய குமரன், கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டிய ராஜன் ஆகியோர் விருதுநகர் மாவட்ட எஸ்.பி. கண்ணனிடம் இன்று தனித்தனியே புகார் அளித்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *