
டேராடூன்: தனது பிறந்த நாளை முன்னிட்டு, பார்வை மாற்றுத் திறனாளி மாணவர்கள் பாடிய பிறந்தநாள் வாழ்த்துப் பாடலைக் கேட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கண்கலங்கினார்.
உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் இன்று (20.6.2025) ராஷ்டிரபதி தபோவனம், ராஷ்டிரபதி நிகேதன் ஆகியவற்றின் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பங்கேற்றார். ராஷ்டிரபதி நிகேதனில் அமைக்கப்பட உள்ள ராஷ்டிரபதி தோட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய அவர், பார்வையாளர் வசதி மையம், உணவகம், பத்திரிகை அங்காடி ஆகியவற்றை திறந்து வைத்தார்.