• June 20, 2025
  • NewsEditor
  • 0

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் இன்று (ஜூன்20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. 

இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா போன்றோர் நடித்திருக்கிறார்கள்.

குபேரா

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இன்று இப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் படக்குழுவினரை வாழ்த்தி நடிகை சாய் பல்லவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “‘குபேரா’ படம் சிறப்பான ஒரு படமாக இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. தனுஷ் சார் மாஸ்டர் க்ளாஸ். சவாலான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து இயல்பாக நடிக்கக் கூடிய திறமை அவருக்கு இருக்கிறது.

சேகர் காரு இயக்கத்தில் நாகர்ஜுனா காருவை ஒரு கொலையாளி கதாபாத்திரத்தில் பார்ப்பது ஒரு விருந்தாக இருக்கும். அன்புள்ள ராஷ்மிகா, சேகர் காரு தனது பெண் கதாபாத்திரங்களை எவ்வளவு சக்திவாய்ந்ததாகவும், தனித்துவமாகவும் எழுதுகிறார் என்பது நமக்குத் தெரியும்.

இது உங்கள் வெற்றித் தொடரில் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரமாகவும், பிரமாண்டமான வெற்றியாகவும் இருக்கும்.

சாய் பல்லவி
சாய் பல்லவி

சேகர் காரு  நீங்கள் ஒரு தலைமுறையை ஊக்குவிக்கிறீர்கள், நானும் அதில் ஒருவர். மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், இதுபோன்ற மேலும் பல கதைகளை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உங்கள் அனைவரின் மகிழ்ச்சிக்காகவும் பிராத்திக்கிறேன்” என்று ‘குபேரா’ படக்குழுவை வாழ்த்தி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *