
ராஜஸ்தானின் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் பாலிகாட் என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதி அடர்ந்த, முட்கள் நிறைந்த காடுகள் மற்றும் கரடு முரடான பள்ளத்தாக்குகளுக்கு மத்தியில் உள்ளது. இந்த பாலிகாட் பகுதி தேசிய சம்பல் கரியால் சரணாலயத்திற்குள் அமைந்துள்ளது.
இந்தப் பகுதி இதுவரை பதிவு செய்யப்படாத மிக உயர்ந்த கரியால் (முதலை) இனப்பெருக்க தளமாக மாறி உள்ளது. கரியால் என்பது நீண்ட மூக்கு கொண்ட முதலை இனமாகும்.
பாலிகாட்டில் 25க்கு மேற்பட்ட கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூட்டிலும் பெண் முதலைகள் சுமார் 30 முதல் 50 முட்டைகள் இடுகின்றன. இதுவரை கிட்டத்தட்ட 150 குஞ்சுகள் வெளிவந்துள்ளன.
மொத்த எண்ணிக்கை விரைவில் 200 தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு அதன் இனப்பெருக்கத்தின் அளவு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான இனப்பெருக்க தளத்தை பாதுகாக்க வனத்துறை ஊழியர்களும் வனவிலங்கு நிபுணர்களும் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர்.
இந்த பகுதி வேலி அமைக்கப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பருவ மழை தொடங்கியதும் அருகில் இருக்கும் சம்பல் நதியின் நீர்மட்டம் உயரும். இதற்கு முன்பு முதலை பாதுகாப்பிற்கான நடவடிக்கை எடுக்க வன துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.
இயற்கை பேரழிவு, காடுகளில் வேட்டையாடுதல் போன்ற பல்வேறு காரணங்களால் குறைவான கரியால் குஞ்சுகள் மட்டுமே உயிர் பிழைப்பதாகவும் அதனால் கனமழை தொடங்குவதற்கு முன்பு புதிதாக பிறந்த குஞ்சுகளை பாதுகாப்பான வளர்ப்பு மையத்திற்கு மாற்ற வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
பாலிகாட்டில் வரவிருக்கும் வளர்ச்சி, வசதி ஆகியவை கரியால் குஞ்சு, முட்டைகளை பாதுகாப்பதோடு, அறிவியல் பூர்வமாக பாதுகாப்பதற்கான மையத்தை மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இது ஒரு இனத்தை மட்டும் பாதுகாப்பதை தாண்டி நதி, சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலையை பாதுகாப்பது என்று வன துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒரு காலத்தில் லட்சக்கணக்கில் இருந்த கரியால்கள் இன்று இந்தியாவில் சுமார் 2,500 ஆக குறைந்துவிட்டன. பெரும்பாலானவை சம்பல் நதியில் வாழ்கின்றன.
ஒவ்வொரு ஆண்டும் கரியால் குஞ்சுகள் பிறக்கின்றன என்றாலும் காடுகளில் அவை வாழும் விகிதம் குறைவாக உள்ளது. இந்த ஆண்டு புதுப்பிக்கப்பட்ட முயற்சியினால் இதனை பாதுகாக்கக்கூடும் என்று வனத்துறையினர் நம்புகின்றனர்.