
காஞ்சிபுரம் நகரத்தின் நடுவே அமைந்துள்ள மஞ்சள் நீர் கால் வாய் நகரப்பகுதி குடியிருப்புகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் வடிகால்வாயாக விளங்கி வருகிறது. ஒக்கப்பிறந்தான் குளத்திலிருந்து வெளியேறும் உபரிநீர், நகரத்தின் நடுவே உள்ள விவசாயிகளின் பாசனத்தேவையை பூர்த்தி செய்து, நத்தப்பேட்டை ஏரியை சென்றடையும் வகையில் மன்னர்கள் காலத்தில் கட்டமைக்கப்பட்டதாக தெரிகிறது. எனினும், ஒக்கப்பிறந்தான் குளத்தின் ஆக்கிரமிப்புகள் காரணமாக நீர்வரத்து இன்றியும் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் சாயப்பட்டறை கழிவுநீரும் இந்த கால்வாயில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நகரப்பகுதியில் உள்ள குடியிப்புகளின் கழிவுநீர் மற்றும் சாலைகளில் தேங்கும் மழைநீர் வெளியேறி நத்தப்பேட்டை ஏரியை சென்றடைகிறது. இதனால், ஏரியின் நீர் மாசடைந்துள்ளது. இதனால், மஞ்சள் நீர் கால்வாயில் கழிவுநீர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தடுத்து, கால்வாயை சீரமைக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.