• June 20, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: ​நாட்​டின் ஐடி தலைநக​ராக பெங்​களூரு விளங்கி வரு​கிறது. இங்​குள்ள தனி​யார் நிறு​வனங்​களின் தலைமை செயல் அதி​காரி​கள் சிலர், ஊழியர்​களின் தினசரி வேலை நேரத்தை அதி​கரிக்க வேண்​டும் என்று கர்​நாடக அரசுக்கு கடிதம் அனுப்​பினர். அதன் அடிப்​படை​யில், ஊழியர்​களின் வேலை நேரத்தை 10 மணி நேர​மாக உயர்த்த கர்​நாடக அரசு​முடி​வெடுத்​துள்​ளது. இதற்​காக கர்​நாடக தொழிலா​ளர் சட்​டத்​தில் திருத்​தங்​களை மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளது.

அதன்​படி கர்​நாடக கடைகள் மற்​றும் வணிக நிறு​வனங்​கள் சட்​டத்​தின்​படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேர​மாக வரையறுக்​கப்​பட்​டுள்​ளது. கூடு​தல் நேரம் (ஓவர் டைம்) வேலை பார்த்​தா​லும் ஒரு மணி நேரம் மட்​டுமே பார்க்க வேண்​டும். மூன்று மாதங்​களில் அதி​கபட்​ச​மாக 50 மணி நேரம் மட்​டுமே ஓவர் டைம் வேலை செய்ய அனு​ம​திக்க வேண்​டும் என விதி​முறை வகுக்​க‌ப்​பட்​டுள்​ள‌து.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *