
சென்னை: சமூகநீதிக்கான போர்க் களத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும் என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பாமக உட்கட்சி பிரச்சினை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸை கலங்க விடக்கூடாது, அவர் பேச்சைக் கேட்டு பாமக தலைவர் அன்புமணி நடந்து கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஊடக நேர்காணலில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், "விசிக தலைவர் திருமாவளவன் மீது எனக்கு தனிப்பட்ட பாசம் உண்டு" என்பன உள்ளிட்ட கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.