• June 20, 2025
  • NewsEditor
  • 0

சேதம் அடைந்த கருப்பு பெட்டிகள்

கடந்த ஜூன் 12-ம் தேதி, மதியம் 1:38-க்கு அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கிளம்பிய விமானம் சுமார் 1:43 மணியளவில் விபத்தில் சிக்கியது.

அந்த போயிங் 171 விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழக்க, ஒருவர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார். இந்த விபத்திற்கான காரணம், இன்னும் சரியாக தெரியவில்லை. விபத்தில் சிக்கிய விமானம் இரண்டு கருப்பு பெட்டிகளைக் கொண்டது. ஒன்று ஜூன் 13-ம் தேதி மீட்கப்பட்டது. மற்றொன்று ஜூன் 16-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பெட்டிகளை ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரலாம். மீட்கப்பட்ட இந்த இரண்டு பெட்டிகளும் மிகவும் சேதம் அடைந்துள்ளது. அதனால், அவை ஆய்வுக்காக அமெரிக்க அனுப்பப்பட இருக்கிறது என்று நேற்று செய்திகள் கசிந்தன.

அகமதாபாத் விமான விபத்து

விமானப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

இதற்கு மறுப்பு தெரிவித்த சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், “விமான விபத்து விசாரணைப் பணியகம் (AAIB), இந்த இரு கருப்பு பெட்டிகளையும் டெக்னிக்கல் மற்றும் பாதுகாப்பு ரீதியாக ஆய்வு செய்யும். இதில் கிடைக்கும் தரவுகளை வைத்தே, கருப்பு பெட்டிகள் இந்தியாவிலேயே ஆய்வு செய்யப்படுமா அல்லது வெளிநாடு அனுப்பப்படுமா என்கிற முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தான், கருப்பு பெட்டிகளை ஆய்வு செய்யும் நவீன ஆராய்ச்சி மையம் டெல்லியில் திறக்கப்பட்டது. அதனால், இந்தக் கருப்பு பெட்டிகள் பெரும்பாலும் இந்த ஆராய்ச்சி மையத்தில் தான் ஆய்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு வேளை கருப்பு பெட்டிகள் வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்டால், அத்துடன் இந்திய குழு ஒன்றும் செல்லும் என்று கூறப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *