
சேலம்: திமுக ஆட்சியை அகற்றுவதே எங்களின் முதன்மையான கடமை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார்.
சேலத்தில் நேற்று நடைபெற்ற பாமக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: சேலம் மாவட்டம் பாமக கோட்டை. இங்கு பாமக தனித்து நின்று 2 எம்எல்ஏ-க்களைப் பெற்றது. கடந்த சில வாரங்களாக என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் 100 சதவீதம் பொய்யானவை. இதுகுறித்து சில நாட்களில் விளக்கம் அளிக்கிறேன். கட்சிக்காகவும், சமுதாயத்துக்காகவும் சுமைகளைத் தாங்கிக் கொண்டிருக்கிறேன்.