
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள உச்ச நீதிமன்றம், விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு அறிவுறுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு களாம்பாக்கத்தை சேர்ந்த சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ, முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், நீதிமன்றத்தில் ஆஜரான ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராமை கைது செய்து விசாரிக்கவும், ஜெகன்மூர்த்தி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டார். அதன்படி, நீதிமன்ற வளாகத்திலேயே கைது செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், விசாரணைக்கு பிறகு மறுநாள் மாலை விடுவிக்கப்பட்டார். அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.