• June 20, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

அன்புள்ள அம்மா செல்விக்கு,

நலம் ,நலம் அறிய ஆவல்

அப்பாவிற்கு இது வரை நிறைய கவிதை எழுதிருக்கேன் ஆனா ஒரு தடவ கூட உங்களுக்கு ஏன் எழுதலனு நீங்க கேட்டதே இல்ல …ஒரு விசயம் கூடவே இருந்தா அதோட மதிப்பு அப்பவே தெரியாதுல அந்த மாதி தான் ..

உங்களுக்கு நா எழுதுற முதல் கடிதம் இது..

நீங்க இல்லனா என் வாழ்க்கையே இல்ல ..எல்லா நேரத்திலும் என் கூடவே நின்டு இருக்கீங்க…எந்த இடத்துலயும் என்ன விட்டு கொடுத்ததே இல்ல ..என்ன விட என்ன நல்லா புரிஞ்சுகிட்டவங்க நீங்க தான் ..

எந்த ஒரு விசயம் நாலும் நா உங்க கிட்ட சொல்ல தயங்குணதே இல்ல .. எனக்கு நிறைய நேரத்துல சிறந்த தோழியா இருந்திருகிங்க…நிறைய விசயத்த உங்கள்ட எப்படா சொல்லுவோம்னு நா காத்திருந்த நாட்கள் லாம் உண்டு…

அப்பா presence கூட இல்லாம என்னையும் ஜோயல் லையும் வளர்க்க நீங்க அவளோ கஷ்டபட்டு இருக்கீங்க …உங்களுக்கான சொந்த விருப்பங்கள் பல விசயத்த எங்களுக்காக தியாகம் செஞ்சிருகிங்க …ஒரு கணவன் கூட இல்லாம இருக்க பெண்களுக்கு வர கஷ்டம் அவளோ இருக்கு ..ஆனா நீங்க எங்கையும் மனம் தளராமல் இருந்திங்க…

குடும்பத்த ரொம்ப அழகா பாத்துகிட்டீங்க .. எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எங்களுக்கான தேவைகளை வாங்கி கொடுத்திட்டு இருந்திங்க.. என்னோட திறமைகளை எந்த இடத்துலயும் நீங்க முடக்குனது இல்ல …

ஊ்ர் ல வயசுக்கு வந்த பிள்ளைங்கல வெளிலையே விடாம இருக்கும்போது எனக்கு நீங்க எந்த தடையும் விதித்தது இல்ல…

அப்பாவோட வருகைக்கான காத்திருப்புக்களையும் தவிப்புகளையும் உங்க கூடவே இருந்து பாத்தவ நா…

சின்ன வயசுல உங்க ஸ்கூட்டி பின்னாடி உட்கார்ந்து எந்த கவலையும் இல்லாம போனதுளாம் எனக்கு மறக்க முடியாத நினைவுகள்…நிறைய விசயத்த தனியா நிண்டு போராடி இருக்கீங்க..

உங்கள்ட எனக்கு முக்கியமா பிடிச்ச ஒரு விசயம் என்ன எந்த இடத்துலயும் விட்டு கொடுக்காம இருக்கிறது…

மேல் வீட்டு செல்வி அத்தை என்ன பத்தி தப்பா பேசுன அப்ப என் பக்கம் தான் நின்டீங்க ..நீங்க நினைச்சிருந்தா என்ன சந்தேகப்படிருக்களாம் ..ஆனா நீங்க மத்த அம்மாக்கல மாதி நடந்திகிரல..

12 th ல ,Neet la நீங்க எதிர்பார்க்கிற மார்க் வாங்களனாலும் கூட எண்ட கோபப்படல என் கூட நிண்டீங்க எனக்கு ஆறுதல் சொன்னீங்க….

Vfh ல நிறைய விசயத்துக்கு எனக்கு support பண்ணீங்க…

நா அழும்போது யோசிக்கிற மடி நீங்க தான் …நா சந்தோசமா இருக்கும்போது அத first சொல்லனும்னு நினைக்கிற நபர் நீங்க தான் …

உங்கல யார் ஒதுக்குனாலும் தப்பா நினைச்சாலும் ..நா அப்பா ஜோயல் உங்க கூடவே இருப்போம்.. உங்க வாழ்க்கைல எவ்வளவோ ஏளனம் புறக்கணிப்புகல பார்த்திருக்கலாம் .. உங்கள கண்டிப்பா நானும் ஜோயலும் பெரும பட வைப்போம் …

உங்க குழந்தைதனங்களும் என்னோட செல்லமா போடுற சண்டைகளும் எப்பவுமே வேணும்…நீங்களும் அப்பாவும் இப்ப போல எப்பவும் happieee அஹ் இருக்கணும் ..கடன் பிரச்சினை எதையும் நினைக்காமல் சந்தோசமா இருங்க…

எனக்காக கூட நின்றதுக்கும் ,எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்களுக்கும் நன்றி..

-அன்பு செல்வ மணி ராணி சாமி

Letter Contest

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *