
சென்னை: திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மீண்டும் அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என அமலாக்கத்துறை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் திரைப்படத் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபரான விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். பின்னர் விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்துக்கு சீல் வைத்தனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.