• June 19, 2025
  • NewsEditor
  • 0

கேரளாவில் பெட்ரோலிய வணிகர்கள் மற்றும் பல பெட்ரோல் நிலைய உரிமையாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பானது, பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளை பொதுப் பயன்பாட்டுக்கானதாக வகைப்படுத்துவதை எதிர்த்து, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கெதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

பெட்ரோல் நிலையம்

நீதிபதி சி.எஸ். டயஸ் முன்னிலையில் நேற்று நடைபெற்ற இந்த மனு மீதான விசாரணையில், “பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் வாடிக்கையாளர்களின் அவசர தேவைகளுக்கானது. அவற்றைப் பொதுமக்களுக்கானதாக மாற்றக்கூடாது.” என்று மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கேரளா உயர் நீதிமன்றம்
கேரளா உயர் நீதிமன்றம்

மனுதாரரின் இத்தகைய கோரிக்கையை ஏற்ற நீதிபதி சி.எஸ்.டயஸ், “பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகளைப் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என வலியுறுத்த வேண்டாம்” என்று மாநில அரசு மற்றும் திருவனந்தபுரம் நகராட்சிக்கு உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, இந்த உத்தரவின் பேரில் நீதிமன்றம் இவ்வழக்கை ஜூலை 17-க்கும் தேதி மேலும் விசாரணைக்குப் பட்டியலிட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *