• June 19, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: ‘புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றம் போய் உத்தரவு வாங்கி வருமாறு கூறினால் காவல் நிலையங்கள் எதற்கு?’ என்று உயர் நீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை விளாங்குடி பகுதியை சேர்ந்த சுரேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறோம். எங்களுக்கு மதுரை மாவட்டம் அய்யன்கோட்டை, நகரியில் குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களிலிருந்து பொருட்களை வாகனங்களில் ஏற்றி, இறக்க 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். இந்நிலையில், எங்கள் குடோனுக்கு வந்த தனிநபர்கள் சிலர் குடோனில் உள்ள பொருட்களை நாங்கள் தான் வாகனங்களில் ஏற்றி, இறக்குவோம் எனக் கூறி தகராறு செய்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *