
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கர்நாடக அரசு கூட்டங்களைக் கையாள புதிய சட்டங்களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதன்படி, பெரும் நிகழ்ச்சிகளை நடத்தும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே இதுபோன்ற அசம்பாவிதங்களுக்கு பொறுப்பாவார்கள், மூன்று வருட சிறை தண்டனை, ரூ.5 லட்சம் வரை அபராதம் என்று பல்வேறு விதிகளை வகுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.