• June 19, 2025
  • NewsEditor
  • 0

மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் எஸ்.பி.எஸ்.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன். இவரது மகன் எஸ்.பி.எஸ்.ராஜா. தூத்துக்குடி மாநகராட்சி 59-வது வார்டு மாமன்ற உறுப்பினரான ராஜா, அதிமுகவில் தூத்துக்குடி தெற்கு பகுதி செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவரை, ரூ.17 கோடி மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதையடு த்து ராஜாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *