• June 19, 2025
  • NewsEditor
  • 0

சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்து அணியை நாளை (ஜூன் 20) எதிர்கொள்ளவிருக்கிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் கோலி இல்லாததும், மூன்று போட்டியில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்பதும் கில் அண்ட் கோ-வுக்கு சற்று சவாலானதுதான். அதேசமயம், இது ஒரு புதிய அணியை கட்டமைப்பதற்கான வாய்ப்பும் கூட.

இந்த நிலையில், எதிரணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் இல்லாதது குறித்து துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் பேசியிருக்கிறார்.

ரிஷப் பண்ட்

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரிஷப் பண்ட், “அவர்கள் இருவரும் இல்லாதது நிம்மதியா இருக்கிறது.

ஏனெனில் பல வருடங்களாக இங்கிலாந்து அணியில் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.

கடைசி இரண்டு சுற்றுப்பயணங்களில் மட்டும் அவர்களுக்கெதிராக நான் விளையாடியிருக்கிறேன்.

இருப்பினும், தற்போதைய இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் போதுமான அளவுக்குப் பலமாக இருக்கிறது.

எங்கள் அணியும் இளம் அணியாக இருப்பதால் யாரையும் எளிதாக எடுத்துக்கொள்ள விரும்பவில்லை.

இந்த இளம் வீரர்கள் தங்களை இன்னும் மேம்படுத்த விரும்புகிறார்கள். அதேசமயம், நமக்கான ஆட்டத்தையும் நாம் ஆடவேண்டும்.

ஸ்டூவர்ட் பிராட் - ஜேம்ஸ் ஆண்டர்சன்
Stuart Broad – James Anderson

எதிரணி பந்துவீச்சாளர்களையும் தேவைப்படும் இடத்தில் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கெதிராக அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சனும் (149 விக்கெட்டுகள்), 7-வது இடத்தில் ஸ்டூவர்ட் பிராட்டும் (74 விக்கெட்டுகள்) இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *