
திருச்சி அருகே நடந்த விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பலியானார்.
திருச்சி மாவட்டம் முசிறி வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்தவர் ஆரமுத தேவசேனா (54). இன்று அவர் அலுவல் நிமித்தமாக முசிறியில் இருந்து தனது காரில், திருச்சி- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரின் காரை, திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த பிரபாகரன் ஓட்டினார்.