
திருப்பதி: ஆந்திராவில் ஜெகன் ஆட்சியின் போது நடைபெற்ற மதுபான கொள்கை ஊழல் குறித்த விசாரணையில் ரூ.1000 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் சந்திரகிரி பேரவை தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் சிறப்பு அறங்காவலர் குழு உறுப்பினருமான செவிரெட்டி பாஸ்கர் ரெட்டியை ஆந்திர போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர். இவர் இலங்கை தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.