• June 18, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை 3 வாரங்களுக்குள் 3 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாகச் செய்து மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையை பதித்துள்ளது. இதில் இரண்டு மூளைச்சாவு அடைந்தவர்கள் தானம் அளித்த சிறுநீரகங்கள் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும், மற்றொன்று உறவினர் தானம் மூலம் நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை ஆகியவை அடங்கும்.

இதனை சிறுநீரியல் அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர், மருத்துவர் சுதாகர் மற்றும் சிறுநீரக தலைமை மருத்துவர் குமார் ஆகியோரின் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு செயல்படுத்தியுள்ளனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *