
சென்னை: எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், உலக குருதி கொடையாளர் தின நிகழ்வை அமைச்சர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, 66 முறை ரத்த தானம் செய்துள்ளதை பாராட்டி “தொடர் தன்னார்வ குருதி கொடையாளர்“ என்கின்ற சிறப்பு விருதை அமைச்சருக்கு சுகாதாரத் துறை செயலர் ப.செந்தில்குமார் வழங்கினார்.