
சென்னை: முருக பக்தர்கள் மாநாட்டில் அரசியல் கருத்துகள் இடம்பெறாது, மாநாட்டுக்காக சென்னையில் இருந்து ஜூன் 21-ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முருகன் மாநாட்டுக்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயில் ஜூன் 21-ம் தேதி இரவு புறப்பட்டு, 22-ம் தேதி காலை மதுரை சென்றடையும். பின்னர், 22-ம் தேதி மாலை மதுரையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் சென்னை வந்தடையும். தமிழகம் முழுவதிலும் இருந்து மாநாட்டுக்காக வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.